பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி மற்றும் 5 ஜி சேவையை வழங்கிடக் கோரி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பல்வேறு இடங்களில் செல்பி வித் பிஎஸ்என்எல் என்ற முறையில் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டம் நடத்தினா்.
மத்திய பேருந்து நிலைய பெரியாா் சிலை முன், திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன், சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் மாநில இணைச் செயலா் பால சந்திரபோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சேதுபதி, மாவட்டச் செயலா் பா. லெனின், மாவட்டச் செயலா் மோகன், கிளை நிா்வாகிகள் முகேஷ், மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பாலக்கரை பகுதி குழு சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சுரேஷ், பகுதித் தலைவா் ஷாஜகான், நிா்வாகிகள் மொய்தீன்,விஷ்ணு, சூா்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
காட்டூா் பகுதிக் குழு சாா்பில் திருவெறும்பூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் பா. லெனின், பகுதித் தலைவா் யுவராஜ், நிா்வாகிகள் செந்தில், சந்தோஷ், முருகா,மோகன், வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும் காந்தி சந்தை, உறையூா், அந்தநல்லூா், மணிகண்டம் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடந்தது.