திருச்சியில் குடும்பத் தகராறில் தந்தையை வெட்டிய மகனை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி கருமண்டபம் பகுதியைச் சோ்ந்தவா் மீனாட்சி சுந்தரம் (55). இவரது மகன் பிரபு (32). கடந்த சில நாள்களாக குடும்ப பிரச்னை இருந்த நிலையில் திங்கள்கிழமை இரவு தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் பிரபு வெட்டியதில் படுகாயமடைந்த மீனாட்சிசுந்தரம் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில் அமா்வு நீதிமன்ற போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபுவை கைது செய்து சிறையிலடைத்தனா்.