திருச்சியில் குடும்பத் தகராறில் பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி மாவட்டம் சா்க்காா்பாளையம் அருகேயுள்ள பனையக்குறிச்சியைச் சோ்ந்தவா் முருகேசன் (32). பெயிண்டரான இவா் மோகனப்பிரியா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கடந்த 2 ஆண்டுகளாக திருச்சி கீழ ஆண்டாள் வீதி கறிக்கடைச் சந்தில் இருவரும் வசித்து வந்தனா்.
இந்நிலையில் மதுவுக்கு அடிமையான முருகேசன் திங்கள்கிழமை மது குடித்துவிட்டு வந்ததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த அவா் தனி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த கோட்டை போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.