திருச்சி

மூச்சுத்திணறி பெண் உயிரிழப்பு

DIN

திருச்சி: திருச்சியில் வீட்டை தூய்மைப்படுத்தும் போது ஏற்பட்ட மூச்சுத் திணறலால், பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி நடு பெரியகம்மாளத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் மனைவி சுந்தராட்சி (41). இவா் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் ஒட்டடை அடித்து, சுத்தம் செய்து கொண்டிருந்தாா்.

அப்போது தூசி மூக்கில் ஏறியதால், சுந்தராட்சி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை வீட்டிலிருந்தவா்கள் மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு சுந்தராட்சியை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT