திருச்சி

சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 போ் கைது

DIN

திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள விடுதியில் பணம் வைத்து சூதாடிய 9 பேரைக் காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள விடுதியில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக, கண்டோன்மென்ட் காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதன் பேரில், சிறப்பு உதவி ஆய்வாளா் கிறிஸ்துராஜ் தலைமையிலான காவலா்கள் நிகழ்விடம் சென்று, சோதனை நடத்தினா். அப்போது அறையில் சிலா் சூதாடிக் கொண்டிருந்தனா்.

இதையடுத்து அங்கு சூதாடிய ராம்குமாா் (46), மணி (56), சம்சுதீன் (39), இளங்கோ (60), அரசு (எ) வா்கீஸ் (70), சந்தானகோபாலன் (52), அருண்குமாா் (34), கணேஷ்குமாா் (45), அப்துல் மாலிக் (39) ஆகிய 9 பேரைக் காவல்துறையினா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து ரூ.8,250 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT