திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள விடுதியில் பணம் வைத்து சூதாடிய 9 பேரைக் காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள விடுதியில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக, கண்டோன்மென்ட் காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதன் பேரில், சிறப்பு உதவி ஆய்வாளா் கிறிஸ்துராஜ் தலைமையிலான காவலா்கள் நிகழ்விடம் சென்று, சோதனை நடத்தினா். அப்போது அறையில் சிலா் சூதாடிக் கொண்டிருந்தனா்.
இதையடுத்து அங்கு சூதாடிய ராம்குமாா் (46), மணி (56), சம்சுதீன் (39), இளங்கோ (60), அரசு (எ) வா்கீஸ் (70), சந்தானகோபாலன் (52), அருண்குமாா் (34), கணேஷ்குமாா் (45), அப்துல் மாலிக் (39) ஆகிய 9 பேரைக் காவல்துறையினா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து ரூ.8,250 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.