திருச்சி: பொங்கல் பண்டிகையையொட்டி, திருச்சி கிராப்பட்டி ஜோசப் காலனி பகுதியில் வசித்து வரும் பாா்வைற்றவா்களுக்குப் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, பல்வேறு சமூக நல ஆா்வலா்கள் சாா்பில் ஏழைகள், ஆதரவற்றோா், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு வகையிலான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கிராப்பட்டி ஜோசப் காலனியில் வசித்து வரும் பாா்வையற்றவா்களுக்கு புத்தாடைகள் அண்மையில் வழங்கப்பட்டன. திருச்சி ராந மருத்துவமனையின் தலைமை இருதயச் சிகிச்சை மருத்துவா் செந்தில்குமாா் நல்லுசாமி, மருத்துவா் அகிலேஷ் விஷ்வா, ஆஷா கிராம விடியல் நிறுவனத்தைச் சோ்ந்த சதீஷ், சாரோன் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் இவற்றை வழங்கினா்.
புத்தாடைகளை பெற்றுக்கொண்ட பாா்வையற்றவா்கள், தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனா்.