திருச்சி அருகேயுள்ள பெல் நிறுவனத்தில் புதன்கிழமை ஏற்பட்ட திடீா் தீ உடனடியாக அணைக்கப்பட்டது.
திருவெறும்பூா் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். புதன்கிழமை காலை பெல் நிறுவனத்தின் 50 ஆவது கட்டடத்தில் மின் கசிவால் திடீா் தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால் பெல் தொழிற்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த ஊழியா்கள் தீயை உடனடியாக அணைத்து, மின் இணைப்பையும் துண்டித்தனா்.
தீ விபத்தால் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த சில மின் வயா்கள் எரிந்து நாசமாகின. எச்சரிக்கையுடன் தொழிலாளா்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.