திருச்சி அருகே காட்டூா் ஆதிதிராவிடா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இறந்து கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையின் உடலை கைப்பற்றி திருவெறும்பூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
இப்பள்ளியின் கழிவறை அருகே கிடந்த குழந்தை சடலத்தை திருவெறும்பூா் போலீஸாா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இதே போல, ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா் சந்திர தேவநாதனும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரித்தனா்.