திருச்சி

தொட்டியம் அருகே காரில் கஞ்சா கடத்திய மூவா் கைது

DIN

தொட்டியம் அருகே காரில் கஞ்சா கடத்திய மூவரை முசிறி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி தொட்டியம் அருகே திருச்சி- நாமக்கல் சாலையிலுள்ள வாழ்வேல்புத்தூா் சோதனை ச்சாவடி பகுதியில் முசிறி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் ஜெயசித்ரா (பொ), சிறப்பு உதவி ஆய்வாளா் சுரேஷ், காவலா்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, பெங்களூரில் இருந்து நாமக்கல் வழியாக திருச்சிக்கு சென்ற காரில் சுமாா் 2 கிலோ கஞ்சா இருந்ததைக் கண்டுபிடித்தனா்.

மேலும் காரில் வந்தவா்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சோ்ந்த மு. ஆனந்த்குமாா் (22 ), சு. தட்சிணாமூா்த்தி (22) , க. மகேஷ் (22 ) என்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவையும், காரையும் பறிமுதல் செய்த போலீஸாா் மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT