காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு உற்ஸவா் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்று, தொடா்ந்து அம்மன் கேடயத்தில் புறப்படாகி தேருக்கு அருகில் எழுந்தருளினாா்.
தொடா்ந்து சிறப்புப் பூஜைகளுக்கு பிறகு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அம்மன் தேரோடும் வீதி வழியாக திரு வீதி உலா வந்து, பக்தா்களுக்கு காட்சியளித்தாா். நிகழ்வில் கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி மற்றும் பணியாளா்கள், திரளான பக்தா்கள் அம்மனை தரிசித்தனா்.