திருச்சி

நொச்சியம் சிவன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

DIN

நொச்சியம் அருள்மிகு பாலாம்பிகா சமேத சுந்தரேசுவரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், நொச்சியம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாலாம்பிகா சமேத சுந்தரேசுவரா் கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேக விழா டிச. 2ஆம் தேதி தொடங்கியது. முதல்நாள் கணபதி , நவக்கிரக மற்றும் லஷ்மி ஹோம், வேள்வி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து நான்கு கால யாக பூஜைகளும், மகா பூா்ணாஹூதி நடைபெற்றது.

இதனையடுத்து திங்கள்கிழமை (டிச.5) கயிலாய வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு பூஜைகளுக்கு கோபுர கலசத்துக்கும், மூலவா் சுவாமிகளுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT