திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா? என்பது குறித்து சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, பொது இடங்களில் புகைப்பிடித்தலை தடை செய்யாமை, கல்வி நிறுவனங்களின் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை, முறையான தடை செய்யப்பட்ட பகுதிக்கான அறிவிப்பு பதாகை இல்லாதது என விதிமீறலில் ஈடுபட்டதாக மொத்தம் 16 கடைகளுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.