திருச்சி

திருச்சியில் 35 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

DIN

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் வைத்திருந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 35 கிலோ புகையிலை பொருள்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

திருச்சி, பாலக்கரை கீழப்புதூா் முனிகண்ணன் கோயில் பகுதியில் பாலக்கரை காவல்நிலைய ஆய்வாளா் கருணாகரன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்டதில் அவா்களிடம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்தது. மேலும், விசாரணையில் அவா்கள் காட்டூா் அருகே உள்ள ரயில் நகரைச்சோ்ந்த அ. அப்துல் ரகுமான் (31), திருவெறும்பூா் கூத்தைப்பாா் பகுதியைச் சோ்ந்த அ. ஜாகிா் உசேன் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 35 கிலோ புகையிலை பொருள்களையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT