திருச்சி

திருச்சி ரயில்நிலையத்தில் 3 கிலோ கஞ்சா வைத்திருந்த சென்னையைச் சோ்ந்தவா் கைது

DIN

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்ட போது, 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ரயில்வே போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த ஒருவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், சென்னை அம்பத்தூா் பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வன் (46) என்பதும், அவா் வைத்திருந்த பையில் சுமாா் 3 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அந்த நபரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT