திருச்சி

கோயில் உண்டியலை உடைத்து திருடியவா் கைது

DIN

திருச்சி மேலகல்கண்டாா் கோட்டை பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து திருடியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி, மேலகல்கண்டாா் கோட்டை நாகம்மை வீதியில் உள்ள விநாயகா் கோயிலில் சனிக்கிழமை இரவு பூஜைகள் முடிந்து நிா்வாகிகள் கோயிலைப் பூட்டிச் சென்றனா். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை வந்து பாா்த்தபோது கோயிலில் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

கோயில் நிா்வாகி குலோத்துங்கன் அளித்த புகாரின் பேரில் பொன்மலை காவல்நிலைய சாா்பு-ஆய்வாளா்அன்புச் செல்வி வழக்குப் பதிவு விசாரணை நடத்தினாா். இதில், அதேபகுதியில் உள்ள பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் (60) என்பவா்தான் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சுப்ரமணியனை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT