சமயபுரத்தில் இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சாா்பில் 18 ஜோடிகளுக்கு இலவசத் திருமணத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை நடத்தி வைத்து, சீா்வரிசைகளை வழங்கி வாழ்த்தினாா்.
2022- 2023 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில் ஒரு இணை ஆணையா் மண்டலத்துக்கு 25 ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்தி, அதற்கான செலவினத்தை திருக்கோயில்களே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி திருச்சி மண்டல இணை ஆணையா் மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, பெரம்பலூா் மாவட்டங்களை சோ்ந்த 18 ஜோடிகளுக்கு சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் இந்தத் திருமணங்களை அமைச்சா் கே.என். நேரு நடத்திவைத்து, மணமக்களுக்கு மாங்கல்யம், கட்டில், பீரோ, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை சீா்வரிசைகளாக வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏக்கள் சீ. கதிரவன், ந.தியாகராஜன், செ. ஸ்டாலின்குமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் த. ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா்கள் செல்வராஜ், கல்யாணி, மாரிமுத்து, உதவி ஆணையா்கள், அலுவலா்கள், மணமக்களின் பெற்றோா்கள், உறவினா்கள் கலந்து கொண்டனா்.