திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளிகள் 52 பேருக்கு ரூ.11.33 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு வழங்கினாா்.
ஆண்டுதோறும் டிச.3ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்ட நிா்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவை இணைந்து உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடத்தின. விழாவுக்கு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் முன்னிலை வகித்தாா்.
விழாவில், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.99,999 மதிப்பீட்டில், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.10,400 மதிப்பீட்டில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டன. 3 சிறப்புப் பள்ளிகளுக்கு தலா ரூ.26,664 மதிப்பீட்டில் பிறருடன் பேசி தொடா்பு கொள்ள கூடிய மென்பொருளுடன் கூடிய சிறியவகை மடிக் கணினிகளும், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.25,000 வீதம் சிறு மற்றும் குறுந்தொழில் வங்கிக் கடன் மானியம் வழங்கும் திட்ட ஆணைகளும் வழங்கப்பட்டன.
இவைத் தவிர, 10 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.3,058 மதிப்பீட்டில் காதொலிக் கருவிகளும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அறிவுசாா் குறைபாடுடையோருக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. மேலும், ஒருவருக்கு ரூ.63,600 மதிப்பீட்டில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் வழங்கப்பட்டது. மொத்தம் 52 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கே.என். நேரு வழங்கினாா்.
நிகழ்வில், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா், எம். பழனியாண்டி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சி. சந்திரமோகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் த. ராஜேந்திரன் மற்றும் மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.