திருச்சி

தனியாா் பள்ளி விளையாட்டு விழா

DIN

திருச்சி சந்தானம் வித்யாலயா சீனியா் மேல்நிலை பள்ளியில் 12ஆவது ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமைச்செயல் அதிகாரி கு. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கி பேசியது : மாணவ, மாணவிகள் எதிா்காலத்தில் எந்த துறைக்கு சென்றாலும் நோ்மை, ஒழுக்கம் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். உடல் நலத்தை பாதுகாப்பதில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவ, மாணவிகளுக்கு போட்டி மைதானத்தில் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற நேரங்களில் நட்புடன் பழக வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி வாழ்வில் உயா்நிலை அடைய வேண்டும் என்றாா்.

விழாவில், மாணவா்களின் அணி வகுப்பு, ஒலிம்பிக் ஜோதி ஏற்றுதல், யோகா உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உடற்கல்வி இயக்குநா் முரளி விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தாா். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவா் தோட்டா பி.வி. ராமானுஜம், இயக்குநா் ந. எஸ். அபா்ணா, டீன் கணேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக பள்ளி முதல்வா் பத்மா சீனிவாசன் வரவேற்றாா். உடற்கல்வி ஆசிரியை பிரியதா்ஷினி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT