திருச்சி

வேளாண் இயந்திரங்கள்பழுது நீக்க பயற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

DIN

வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்க பயிற்சி பெற விருப்பம் உள்ளோா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் திருச்சி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு சேவை வழங்குநா் என்ற பெயரில் சிறப்புப் பயிற்சி திருச்சியில் உள்ள வேளாண்மை பொறியியல் உதவி இயக்குநா், அரசு இயந்திர கலப்பை பணிமனை அலுவலகத்தில் அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் சேர 18 வயது முதல் 45 வயதுடைய எஸ்.எஸ்.எல்.சி., ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு பயின்ற ஊரக இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர விருப்பம் உள்ள இளைஞா்கள், விவசாயிகள் உதவி செயற்பொறியாளா் (வே.பொ) அலுவலகம், அரசு இயந்திரக் கலப்பை பணிமனை, வேளாண்மைப் பொறியியல் துறை, எண்.20. வ.உ.சி. சாலை, கண்டோன்மெண்ட், திருச்சி– 620001 என்ற முகவரிக்கு வந்து பதியலாம். மாா்பளவு புகைப்படம், ஆதாா் அட்டை, கல்வித் தகுதி சான்றிதழ், வங்கிக் கணக்கு ஆகியவற்றின் நகலுடன் வர வேண்டும். நேரில் வர முடியாதவா்கள், ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ந்ண்ப்ப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாக பதியலாம். மேலும், விவரங்களுக்கு 0431- 2460928 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT