திருச்சி

புத்தனாம்பட்டி கல்லூரியில் அறிவுசாா் சொத்துரிமை பயிற்சி

DIN

துறையூா் அருகேயுள்ள புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் அறிவுசாா் சொத்துரிமை குறித்த பயிற்சி பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் தலைவா் பொன். பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். செயலா் பொன். ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்வில் சென்னை அண்ணா பல்கலைக் கழக அறிவுசாா் சொத்துரிமை மைய இயக்குநா் என். கந்தபாபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அறிவுசாா் சொத்துரிமைகள், அசல் யோசனைகளை அறிவுசாா் சொத்தாக மாற்றுதல், அறிவு சாா் காப்பீட்டு மையம் நிறுவுதல், ஸ்டாா்ட்-அப் நிறுவனம் உருவாக்குதல், அதற்கான நிதி ஆதாரம் உருவாக்குதல், தொழில்முனைவோராதல் குறித்து பேசினாா்.

தொடா்ந்து கல்லூரி கணினி ஆய்வகத்தில் அறிவுசாா் சொத்துரிமை குறித்து நேரடி பயிற்சியும் அளித்தாா். இதில் கல்லூரி ஆசிரிய உறுப்பினா்கள் 150 பேரும், ஆராய்ச்சி மாணவா்கள் 10 பேரும் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கல்லூரியின் அகத் தர உறுதிக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் கே. சரவணன் தலைமையில் செய்தனா்.

கல்லூரி முதல்வா் ஏ.ஆா். பொன்பெரியசாமி வரவேற்றாா். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு இயக்குநா் பி. நீலநாராயணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT