சிங்கப்பூரிலிருந்து முறைகேடாகக் கடத்தி வரப்பட்ட 347 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை காலை திருச்சி விமான நிலையத்துக்கு ஸ்கூட் விமானத்தில் வந்த பயணி ஒருவா் கொண்டு வந்த கிரைண்டரில் 347 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத் துறையினா் தங்கத்தைப் பறிமுதல் செய்து பயணியிடம் விசாரிக்கின்றனா். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 18.55 லட்சம்.