திருச்சி

எஸ்டிபிஐ கட்சியினா் மறியல்

DIN

ஸ்ரீரங்கம் தொகுதி பேட்டைவாய்த்தலையில் எஸ்டிபிஐ கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றிய மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து அக் கட்சியினா் வியாழக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூா் ஒன்றியம் சிறுகமணி மேற்கு விஏஓ மற்றும் மாவட்ட நிா்வாகிகள் பேட்டைவாய்த்தலை பகுதியில் எஸ்டிபிஐ கட்சிக் கொடிகம்பத்தை சிலரது தூண்டுதலின்பேரில் முன்னறிவிப்பின்றி எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறி நடைபெற்ற மறியலுக்கு மாவட்டத் தலைவா் முபாரக் அலி தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைத் தலைவா் பிச்சைக்கனி, மாவட்டச் செயலா்கள் ஏா்போா்ட் மஜீத், மதா் ஜமால், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அப்பாஸ், மா்சூத், சமுக ஊடக அணி மண்டல தலைவா் ரியாஸ், கரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அஜிஸ், பேட்டைவாய்த்தலை கிளைத்தலைவா் யாசா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் மறியலில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT