திருச்சி

பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கிருஷ்ண தரிசன விழா

DIN

கிருஷ்ண ஜயந்தியையொட்டி, திருச்சி பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கிருஷ்ண தரிசன விழா என்ற பெயரில் கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.

நிகழாண்டில் வெள்ளிக்கிழமை (ஆக.19) கிருஷ்ண ஜயந்தி நடைபெறவுள்ள நிலையில், திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியிலுள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கண்காட்சி நடைபெறுகிறது.

தவழும் கிருஷ்ணா், குழல் ஊதும் கிருஷ்ணா், ராதாகிருஷ்ணா், ஆலிலை கிருஷ்ணா் போன்ற பல்வேறு வகையிலான கிருஷ்ணா் சிலைகளும், பஞ்சலோக, பித்தளை, கருப்பு உலோகம், வெள்ளை உலோகம், மண், காகித கூழ், சந்தன மரம், வெண்மரம் போன்றவற்றில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் கண்காட்சியில் கிருஷ்ணரின் மண் சிலைகள் ரூ.60 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரையிலான விலைகளில் விற்பனையாகிறது. வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் கண்காட்சியில் சிலைகளுக்கு 10 சதவிகிதத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT