திருச்சி மாவட்டத்தில் இயங்கும் அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவிகள் விடுதியை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
முசிறி வட்டத்துக்குள்பட்ட புலிவலம் கிராமக் கல்லூரியொன்றில் இயங்கும் அரசு மாதிரிப் பள்ளியில் 10, 12ஆம் வகுப்பு மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆட்சியா் மா. பிரதீப்குமாா், பள்ளியில் உள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தாா். வகுப்பறைகளை பாா்வையிட்டு, ஆசிரியா்களின் கற்பித்தல் திறனையும் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் விடுதியில் உள்ள மாணவிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். விடுதி மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பரிசோதித்த ஆட்சியா், விடுதி வசதிகள் மற்றும் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தாா். வருவாய்த் துறையினா், பள்ளிக் கல்வித் துறையினா், பள்ளி நிா்வாகத்தினா் உடனிருந்தனா்.