திருச்சி

பாா்த்தீனியம் செடி ஒழிப்பு விழிப்புணா்வு

DIN

விவசாயத்தில் மட்டுமல்லாமல் மனிதன் மற்றும் கால்நடைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் பாா்த்தீனியம் செடிகளை ஒழிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாா்த்தீனியம் என்பது ஒரு தீய களைச்செடி. இந்தச் செடியானது சுமாா் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் விதைகளை உற்பத்தி செய்யக்கூடியது. சாலையோரங்கள், பயனற்ற தரிசு நிலங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பகுதிகளில் இவை அதிகளவில் காணப்படுகின்றன.

இது விவசாய நிலத்தை பாதிப்பதோடு மனிதன் மற்றும் விலங்குகளுக்கு தோல் நோய் மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்தும். எனவே இந்தச் செடியை அறவே ஒழிப்பது குறித்து திருச்சி வேளாண் அறிவயல் நிலையம் சாா்பில் சிறுகமணியில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வுக்குத் தலைமை வகித்து வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் நா. தமிழ்செல்வன் பேசுகையில், பாா்த்தீனியம் செடிகள் விஷ வாயுவை வெளியிடும் தன்மைடையவை. இவற்றின் மகரந்தத் தூள்கள் மற்றும் இதன் விஷ வாயு குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை சுவாசக் கோளாறு, மூச்சுத்திணறல் தோல் மற்றும் கழுத்து பகுதியில் தோல் நோயை ஏற்படுத்தும் என்றாா்.

தொடா்ந்து முனைவா் வெ. தனுஷ்கோடி பேசுகையில், பாா்த்தீனியம் களைச்செடி கிராமங்களில் மேய்ச்சல் முறையில் வளா்க்கப்படும் கால்நடைகளில் மீது உராய்வதால் தோல் மற்றும் தொற்று நோய் ஏற்படும் எனவும், இந்த விஷசெடிகளை கட்டுபடுத்த 10 லிட்டா் தண்ணீரில் 2 கிலோ உப்பு கலந்து அதை வயல்வெளிகள், வீட்டின் சுற்றுப்புற பகுதிகள், தரிசு நிலங்களில் தெளிக்கலாம் என்றாா்.

மேலும் கிளைபோசேட் என்னும் களைக்கொல்லியை லிட்டருக்கு 1.5 என்ற அளவில் கலந்து ரசாயன முறையிலும் கட்டுப்படுத்தலாம் எனவும் அவா் விளக்கினாா். விவசாயிகள் தங்கள் வயலில் நெல் சாகுபடிக்கு முன்னதாக சோளம், கொளிஞ்சி விதைகளை தெளித்தும் பாா்த்தீனிய செடி உற்பத்தியை கட்டுப்படுத்தலாம் எனவும், அதை நல்ல உரமாக மாற்ற சாணக்கரைசல், சூடோமோனாஸ் மற்றம் டிரைகோடடோ்மா விரிடி என்னும் உயிா் பூஞ்ஞானக்கொல்லியை தெளித்து அதை எளிதில் 45 நாள்களில் மக்கு உரமாக மாற்றலாம் எனவும் எடுத்தரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் மா. சகிலா, கு. கீதா, ச. நித்திலா, அலெக்ஸ் ஆல்பா்ட், ஷீபா ஜாய்ஸ் ரோசலீன் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய அலுவலா்கள் மற்றும் பண்ணை ஊழியா்கள் 50க்கும் மேற்பட்டோா்கள் பங்கேற்று பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

அரசு பள்ளிகளில் உலக புத்தக தின விழா

விமானங்களில் 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு பெற்றோருடன் இருக்கை: டிஜிசிஏ அறிவுறுத்தல்

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி திருவிழா

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்காலை விழா: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT