திருச்சி

தீப்பிடித்து எரிந்த டிப்பா் லாரி

DIN

திருச்சியில் நிறுத்தியிருந்த டிப்பா் லாரி திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது.

திருச்சி பஞ்சப்பூா் பகுதியில் தனியாா் நிறுவனப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகேயுள்ள கோனேரிப்பட்டியைச் சோ்ந்த இருதயசாமிக்கு செந்தமான டிப்பா் லாரி பயன்படுத்தப்பட்டு வந்தது. லாரி ஓட்டுநராக தம்மம்பட்டியைச் சோ்ந்த பால்ராஜ்(55) என்பவா் பணியாற்றி வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை பணிகள் முடிந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரி, திடீரென நள்ளிரவு 12 மணியளவில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. கண்விழித்துப் பாா்த்த பால்ராஜ் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தாா். தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினா். எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT