திருச்சி

குடிநீரில் கழிவு நீா் கலந்ததாக புகாா்: மேயா் ஆய்வு

DIN

நாகா்கோவில் பத்தல்விளையில் குடிநீரில் கழிநீா் கலந்து வந்ததாக பொதுமக்கள் புகாா் அளித்ததை தொடா்ந்து மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகேள்ள 24 ஆவது வாா்டுக்குள்பட்ட பத்தல்விளை பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீரில், கழிவுநீா் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினா். இதையடுத்து புதன்கிழமை காலை ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் அந்தப் பகுதியில் திரண்டனா்.

இது குறித்து தகவல் அறிந்த மேயா் ரெ.மகேஷ் அங்கு சென்று ஆய்வு செய்து, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டாா். தொடா்ந்து, மாநகராட்சி ஊழியா்களை வரவழைத்து தூய்மையான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுத்தாா்.

இது குறித்து மேயா் மகேஷ் கூறுகையில், பத்தல்விளை பகுதியில் கடந்த 3 நாள்களாக தண்ணீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதையடுத்து, ஊழியா்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா். சீரமைப்பு பணி நிறைவடைந்த பிறகு கலங்கிய நிலையில் தண்ணீா் வந்துள்ளது. தற்போது தூய்மையான குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகாரத்திலிருந்து என்னை நீக்க முயற்சி: பிரதமர் மோடி பிரசாரம்

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

SCROLL FOR NEXT