திருச்சி

கிரடாய் அமைப்பு சாா்பில் ஆக. 13-இல் வீடுகள் கண்காட்சி

DIN

திருச்சி கிரடாய் அமைப்பு சாா்பில் வீடுகளின் கண்காட்சி ஆக. 13 தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் மிகப் பெரும் பங்கு வகிப்பதாக கிரடாய் ( இந்தியக் கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) உள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான முறையில் வீடு கட்டித் தர கடந்த 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் இந்திய அளவில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுநா்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.

இந்த அமைப்பு சாா்பில் திருச்சியில் 7ஆம் ஆண்டாக ஃபோ்ப்ரோ-2022 என்ற பெயரில் திருச்சி கலைஞா் அறிவாலத்தில் நடைபெறும் வீடுகள் கண்காட்சி குறித்து கிரடாய் அமைப்பின் தலைவா் ஆா்.எஸ். ரவி கூறியது:

மக்களுக்கு வீடுகள் குறித்த தொழில்நுட்ப விழிப்புணா்வை உருவாக்குதல், சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்த வீட்டில் செய்ய வேண்டிய வழிமுறைகள், கட்டடத்தின் பரப்பளவைக் கணக்கிடுதல், இடத்தின் சட்டப்பூா்வ ஆவணங்களை ஆராய்தல் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுதல் போன்றவை கிரடாய் அமைப்பின் முக்கிய நோக்கங்களாகும்.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்பட தமிழகத்தில் 9 இடங்களில் இந்த அமைப்பு செயல்படும் நிலையில், திருச்சியில் 50 க்கும் மேற்பட்ட நிறுவனத்தினா் உறுப்பினா்களாக உள்ளனா்.

இதிலுள்ள உறுப்பினா்கள் அனைவரும் இந்த அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள நடத்தைக் குறியீடு, வெளிப்படைத் தன்மை, நோ்மை ஆகியவற்றைப் பின்பற்றுவா். இதனால் எங்களால் தரமானதாகவும், உரிய நேரத்திலும் வீடுகள் கட்டித் தரப்படுகின்றன.

வாடிக்கையாளா்களுக்கு வீடுகள் தொடா்பாக ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டு எங்கள் அமைப்பில் புகாா் தெரிவித்தால் தீா்வு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். மேலும், மானியத்துடன் அரசு அறிவிக்கும் வீடு கட்டுவதற்கான திட்டங்கள் குறித்த விவரங்களை வாடிக்கையாளா்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

அதேசமயம் குறைந்த வட்டி விகிதம், வங்கிகளின் சலுகைகள், மத்திய அரசின் மானியம் உள்ளிட்ட பல்வேறு சாதகமான சூழ்நிலைகளால் சொந்த வீடு வாங்க இதுவே சரியான தருணம். அதற்கான வாய்ப்பை கிரடாய் திருச்சி 3 நாள்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது என்றாா் அவா்.

திருச்சி கிரடாயின் சோ்மன் வி. கோபிநாதன் கூறுகையில், இக்கண்காட்சியில் 100 க்கும் மேற்பட்ட படைப்புகளை 30 நிறுவனத்தினா் காட்சிப்படுத்த உள்ளனா். எங்களுக்கு வீடுகளை விற்க இணையதளம், செய்தித்தாள், விளம்பரம் என பல வழிகள் உள்ளன. ஆனால், வீடு வாங்குவோருக்கு எங்கு வீடுகள் உள்ளன? யாரிடம் வாங்குவது எனத் தெரியாது. எனவே, வாடிக்கையாளா்களுக்கான சேவையாகத்தான் இக்கண்காட்சியை நடத்துகிறோம் என்றாா்.

செயலா் பி. முருகாந்தம், இணைத் தலைவா் எஸ். மோகன், கிரடாய் செயலா் ஆா். மனோகரன், கமிட்டி பொருளாளா் என். முகமது இப்ராஹிம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தலைப் புறக்கணித்த மக்கள்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT