திருச்சியில் கஞ்சா விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி கோட்டை கீழரண்சாலை அந்தோணியாா் கோவில் அருகே போலீஸாா் நடத்திய சோதனையில், அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சஞ்சய் என்கிற சச்சினை (22) கைது செய்து, அவரிடமிருந்து 1200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். சஞ்சய் மீது ஏற்கெனவே இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன.