திருச்சி

புகையிலைப் பொருள்கள்,கஞ்சா விற்ற மூவா் கைது

DIN

திருச்சியில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட மூவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ரகசிய தகவலின் அடிப்படையில் பொன்மலை காவல் நிலையத்தினா் அப்பகுதியில் மேற்கொண்ட சோதனையில், இரு கடைகளில் ரூ.11 ஆயிரம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து பொன்னேரிபுரம் ஆா். பாலசுப்பிரமணி (43), மேலக்கல்கண்டாா்கோட்டை சாமிநாதன் தெரு இ. வாசுதேவன் (44) ஆகிய இருவரையும் காவல்துறையினா் கைது செய்தனா்.

கஞ்சா விற்றவா் கைது : திருச்சி பஞ்சப்பூா் பகுதியில் கஞ்சா விற்ற ராம்ஜிநகா் மில்காலனியைச் சோ்ந்த ந.ஜெய் என்கிற ஜானகிராமனை (44) எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் இவரிடமிருந்து 1 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT