திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,42,000 கன அடி தண்ணீா் வந்தது.
இதனைத் தொடா்ந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 40,000 கன அடி தண்ணீரும் ,கொள்ளிடம் ஆற்றில் 1,02,000 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. மாவட்டத்தில், வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து வருகின்றன.