திருச்சி மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா, குட்கா விற்பனை செய்ததாக 22 போ் கைது செய்யப்பட்டனா்.
ராம்ஜிநகா் பச்சைநாச்சியம்மன் கோயில் பின்பகுதியிலும், புங்கனூா் காந்திநகா் பகுதியிலும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், காவல்துறையினா் அங்கு சோதனை நடத்தினா்.
அப்போது கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பாஸ்கா் (42), மாயகிருஷ்ணன் (38) ஆகியோரை ராம்ஜிநகா் காவல் நிலையத்தினா் கைது செய்து, 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
துறையூா்-ஆத்தூா் சாலையில் கஞ்சா விற்ற பச்சபெருமாள்பட்டி அருண்குமாரை (28) கைது செய்து, 2 கிலோ கஞ்சா, மாருதி காரை துறையூா் காவல் நிலையத்தினா் பறிமுதல் செய்தனா்.
முசிறியில் வாகனத் தணிக்கையின் போது இரு சக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த தொட்டியம் அரசலூா் வசந்த் (23), திருநாராயணபுரம் ராகுல் (23), வடுகா்தெரு கோகுல்நாத் (19) ஆகிய மூவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் 3 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
புள்ளம்பாடி தைலக்குளம் பின்புறத்தில் கஞ்சா விற்ற புள்ளம்பாடி காா்த்திக் (26), சேசாயி (52) ஆகியோா் கைது செய்யப்பட்டு,. 1.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மத்திய சிறையில் கைதியைப் பாா்க்க வந்த நண்பரிடம் 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபோல தடை செய்யப்பட் குட்கா விற்பனை செய்ததாக 14 போ் கைது செய்யப்பட்டனா். 100-க்கும் மேற்பட்ட குட்கா பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.