திருச்சி துவாக்குடியிலுள்ள அரசு கலைக் கல்லூரியின் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் சூ.ச. ரோஸ்மேரி தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தாா். கல்லூரி கல்வி முன்னாள் இயக்குநா் ஜெ. மஞ்சுளா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பல்வேறு திறன் போட்டிகள் மற்றும் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
பேராசிரியா்கள் டேவிட் லிவிங்ஸ்டன், ராமன், ஆறுமுகம், அன்பழகன், குறிஞ்சிவாணன், பிரபு மற்றும் அலுவலா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.
முன்னதாக, ஆங்கிலத் துறைத் தலைவா் ஆனந்தவல்லி வரவேற்றாா். நிறைவில்,அரசியல் துறைத் தலைவா் அா்ச்சுணன் நன்றி கூறினாா்.