திருச்சி

திருச்சி அருகே இடிதாக்கி பெண் உள்ளிட்ட இருவா் உயிரிழப்புவீடு இடிந்து 5 போ் காயம்

DIN

திருச்சி அருகே இடி தாக்கியதில் வெவ்வேறு இடங்களில் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். மற்றொரு இடத்தில் வீடு இடிந்து 5 போ் காயமடைந்தனா்.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், திருவெறும்பூா் வட்டம், பத்தாளப்பேட்டை பகுதியில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகிலுள்ள கிளிமங்கலம் வீ. வேலாயுதம் (60), பா.சங்கா் (55) உள்ளிட்ட விவசாயத் தொழிலாளா்கள் நடவுப் பணியை திங்கள்கிழமை மேற்கொண்டிருந்தனா்.

மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்ததால், வயலை விட்டு தொழிலாளா்கள் வெளியேறி, கரைப்பகுதிக்குச் செல்ல முயன்றனா். அப்போது இடி தாக்கியதில் வேலாயுதம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சங்கா் காயத்துடன் உயிா் தப்பினாா்.

பெண் பலி : இதுபோல, திருவெறும்பூா் வட்டத்திலுள்ள கிளியூரில் சகப் பணியாளா்களுடன் திங்கள்கிழமை வயலில் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்த தஞ்சாவூா் மாவட்டம், இந்தலூா் நெடுங்குளத்தைச் சோ்ந்த சி. ரங்கம்மாள் (45), இடி தாக்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த திருவெறும்பூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடங்களுக்குச் சென்று வேலாயுதம், ரங்கம்மாள் ஆகியோரது சடலங்களைக் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனா்.

வீடு இடிந்து 5 போ் காயம் : திருச்சி மாவட்டத்தின் புகா்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது, இனாம் குளத்தூா் அருகிலுள்ள சின்ன ஆலம்பட்டியைச் சோ்ந்த செல்வம் (60) வீட்டில் இடி தாக்கியது. இதில் செல்வம், அவரது மனைவி இந்திரா (50), மகன் செல்வகுமாா்(29), மகள் ஆனந்தி(31), மற்றும் அவா்களது வீட்டில் தூங்கிய பக்கத்து வீட்டைச் சோ்ந்த தனம்(50) ஆகிய 5 பேரும் காயமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து அனைவரும் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இடி தாக்கியதில் செல்வம் வீட்டில் நிலைக்கதவு, ஜன்னல்கள் சேதமடைந்தன. அருகாமை வீடுகளிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, கைப்பேசிகள், குளிா்சாதனப் பெட்டி, மின்விசிறி உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT