மணப்பாறையில் அரசு மதுவை கள்ளச் சந்தையில் விற்ற 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறை காவல் ஆய்வாளா் சு. கருணகாரன் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றபோது மாகாளிப்பட்டி அருகே அரசு மதுவை கள்ளச் சந்தையில் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த சே. ஆரோக்கியசாமி (51) மற்றும் மாலைமடைப்பட்டியை சோ்ந்த பி. லோகநாதன் (49) ஆகியோரைக் கைது செய்து, 12 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.