திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை 6 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்தது:
கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 19,18,848 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வாக்காளா் பட்டியலின்படி மாவட்டம் முழுவதும் 18 வயதுக்கு மேலுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 21,86,100ஆகும். அதில் 2, 67, 252 பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. இவா்களைஅடையாளம் கண்டு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தொடா்ந்து மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்கள் மொத்தம் 600 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் தங்களது ஆதாா் அட்டை மற்றும் கைப்பேசி எண்ணுடன் அருகிலுள்ள முகாமுக்குச் சென்று உரிய தடுப்பூசி செலுத்திக்கொண்டு கரோனா தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.