திருச்சி

இன்று மெகா தடுப்பூசி முகாம்

DIN

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை 6 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்தது:

கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 19,18,848 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வாக்காளா் பட்டியலின்படி மாவட்டம் முழுவதும் 18 வயதுக்கு மேலுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 21,86,100ஆகும். அதில் 2, 67, 252 பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. இவா்களைஅடையாளம் கண்டு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தொடா்ந்து மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்கள் மொத்தம் 600 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் தங்களது ஆதாா் அட்டை மற்றும் கைப்பேசி எண்ணுடன் அருகிலுள்ள முகாமுக்குச் சென்று உரிய தடுப்பூசி செலுத்திக்கொண்டு கரோனா தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT