திருச்சி

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

DIN

திருச்சி அருகே அரசுப் பேருந்து மோதி அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தாா்.

கரூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு திருச்சி நோக்கி புறப்பட்ட அதிவிரைவு பேருந்து முத்தரசநல்லூா் அருகே வந்தபோது ரயில்வே கேட் அருகே சாலையைக் கடக்க முயன்ற 60 வயதுள்ள முதியவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தோா் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்தவா் குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT