திருச்சி

மணப்பாறையில் இருச்சக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து; இளைஞர் பலி

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 16-வது வார்டுக்குட்பட்ட சேதுரெத்தினபுரத்தை சேர்ந்தவர் மச்சக்காளை. இவர் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது இளைமகன் தினேஷ், மணப்பாறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் நுகர்பொருள் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். 

அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று விட்டு தனது இருச்சக்கர வாகனத்தில் மணப்பாறை திரும்பியுள்ளார் தினேஷ். அப்போது இருச்சக்கர வாகனம் திண்டுக்கல் சாலை இரயில்வே மேம்பாலத்தினை கடந்து சாலைக்கு வந்த நிலையில், திருச்சியிலிருந்து மணப்பாறை வழியாக பழனி நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாரத விதமாக இருச்சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

அப்போது, பலத்த சத்தம் ஏற்பட்டது. இதில் இருச்சக்கர வாகனமும், பேருந்தும் பலத்த சேதமடைந்தது. இருச்சக்கர வாகனத்தில் சென்ற தினேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட தினேஷ் வழியிலேயே உயிரிழந்தார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸார் தினேஷ் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மணப்பாறை போலீஸார், அரசு பேருந்து ஓட்டுனர் சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT