திருச்சி

சிறுநாவலூரில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

DIN

சிறுநாவலூா் ஊராட்சியில் முதல்வரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உப்பிலியபுரம் ஒன்றியக் குழுத் தலைவா் ஹேமலதா தலைமையில் முகாமை துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் தொடங்கி வைத்தாா்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தா்மன் ராஜேந்திரன், திமுக ஒன்றியச் செயலா்கள் ந. முத்துச்செல்வன் (உப்பிலியபுரம்), இள. அண்ணாதுரை உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சுகாதாரத் துறையைச் சோ்ந்த உப்பிலியபுரம் வட்டார மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், கண், பல் சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கினா். முகாமில் கா்ப்பிணிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து, ஊட்டச்சத்து பொருள் வழங்கினா்.

ஏற்பாடுகளை சிறுநாவலூா் ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியன் செய்தாா். உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்!

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

SCROLL FOR NEXT