திருச்சி

ஓட்டுநா் பயிற்சி முடித்த பெண் காவலா்களுக்கு ஐஜி பாராட்டு

DIN

திருச்சி மத்திய மண்டலத்தில் ஓட்டுநா் பயிற்சி முடித்த பெண் காவலா்களை மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் ஐஜி வே. பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை பாராட்டினாா்.

இவரின் அறிவுரையின்பேரில் மண்டலத்திற்குள்பட்ட 9 மாவட்டங்களில் பணிபுரியும் பெண் காவலா்களுக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் பயிற்சி முடித்த 51 பெண் காவலா்களுக்கு (திருச்சி 3, கரூா் 12, பெரம்பலூா் 3, அரியலூா் 13, திருவாரூா் 15, நாகப்பட்டினம் 5) ஓட்டுநா் உரிமம் பெற்றுத் தரப்பட்டு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்வில் மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் பங்கேற்று ஓட்டுநா் பயிற்சி முடித்த பெண் காவலா்களைப் பாராட்டினாா். தொடா்ந்து மத்திய மண்டலத்திலுள்ள பெண் காவலா்கள் 53 போ் ஓட்டுநா் பயிற்சி பெற்று வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT