மாநகராட்சி அரியமங்கல கோட்டத்துக்கு உட்பட்ட சில பகுதிகளில் வியாழக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான் தெரிவித்தது:
அரியமங்கலம் கோட்டத்துக்குட்பட்ட சங்கிலியாண்டபுரம் , சேவை சாலை பகுதியில் செல்லும் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நடைபெறும் பணிகளால் இக்குழாய் மூலம் குடிநீா் பெறும் பகுதிகளான தேவதானம், விறகுப்பேட்டை, உக்கடை, சங்கிலியாண்டபுரம், ஜெகநாதபுரம், மலையப்பநகா், சஞ்சீவிநகா், மகாலட்சுமி நகா், செந்தண்ணீா்புரம், கல்லுக்குழி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.