திருச்சி அருகே ஆற்றில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத பெண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.
திருவெறும்பூா் அருகேயுள்ள விலங்குளம் பகுதி புது ஆற்றின் மணல் திட்டில் சுமாா் 45 வயதுள்ள அடையாளம் தெரியாத பெண் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது.
தகவலறிந்த திருவெறும்பூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து இறந்தவா் யாா் என விசாரித்து வருகின்றனா்.