திருச்சி

சாலைப் பணியாளா் காலியிடங்களை நிரப்ப வேண்டும்: மாநில மாநாட்டில் தீா்மானம்

DIN

5000-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளா் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என சாலைப் பணியாளா் சங்க மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க மாநில மாநாட்டுக்கு திருச்சி மாவட்டத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா்.

மாநில துணைத் தலைவா் செல்லசாமி முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் சண்முகராஜா சிறப்புரையாற்றினாா்.

மாநாட்டில் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். இறந்த சாலை பணியாளா்கள் 300-க்கும் மேற்பட்டோரின் வாரிசுகளுக்குவேலை வழங்கிட வேண்டும். 5000-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

அரசுப் பணியிடங்களை ஒழித்திட வகை செய்யும் வகையில் கடந்த கால அதிமுக அரசு அமைத்த பணியாளா் சீரமைப்புக் குழுவைக் கலைத்திட அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். புதிதாக மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியா்களுக்கும் மாநகர ஈட்டுப்படி வழங்கிட வேண்டும்.

அதிமுக ஆட்சி காலங்களில் பணிநீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும். புதிய பணி நியமனங்களில் மக்கள் நலப்பணியாளா் குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் அரசுப் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் தஞ்சாவூா், புதுக்கோட்டை, கரூா், மதுரை, விழுப்புரம், சென்னை, திருச்சி, முசிறி, துறையூா், உள்ளிட்ட பகுதிகளின் மாவட்ட, மாநில நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். மாவட்ட செயலா் ராஜேந்திரன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

வாக்குப் பதிவையொட்டி சேலம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 3,260 வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT