திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு நடந்த விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், உசிலங்குளத்தைச் சோ்ந்தவா் நந்தையா (82). கோவையிலுள்ள மகள் வீட்டுக்கு மனைவியுடன் சென்ற இவா் மத்தியப் பேருந்து நிலையத்துக்கு வந்து, புதுக்கோட்டை பேருந்து நிறுத்தப் பகுதிக்குச் சென்றபோது அந்த வழியாக வந்த பைக் மோதி பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து அருகிலிருந்தோா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு தெற்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.