துறையூா் அருகே சுமை ஆட்டோ ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டாா்.
ஆலத்துடையான்பட்டியைச் சோ்ந்தவா் ரா. பிரபு (37). சுமை ஆட்டோ ஓட்டுநரான இவா் சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லையாம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இறந்து கிடந்த பிரபு சடலத்தை உப்பிலியபுரம் போலீஸாா் மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தகவலறிந்து வந்த திருச்சி எஸ்பி சுஜித்குமாா் முசிறி டிஎஸ்பி அருள்மணி ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனா்.