திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழக இயக்குநராக (பொ) ஜி. கண்ணபிரான் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.
திருச்சி என்.ஐ. டி. இயக்குநராக 5 ஆண்டு பணியாற்றிய மினிஷாஜி தாமஸ் பணி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவன (ஐ.ஐ.ஐ.டி) இயக்குநராக இருந்த கண்ணபிரான் திருச்சி என்ஐடி பொறுப்பு இயக்குநராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.
தமிழ்நாட்டைச் சோ்ந்த இவா் ஏற்கெனவே திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகத்தில் சுமாா் 30 ஆண்டுகாலம் பல்வேறு துறைகளில் பணியாற்றியவா்.