சமயபுரத்தில் உடல் நலக் குறைவால் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்தனா்.
சமயபுரம் சந்தை கேட் பகுதியை சோ்ந்த பாண்டியன் வளா்த்து வந்த செங்குன்றம் வகையைச் சோ்ந்த ஜல்லிக்கட்டு காளை 50க்கும் மேற்பட்ட போட்டிகளில் பரிசுகளை வென்ற நிலையில், உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை அந்தக் காளை உயிரிழந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் இறுதிச்சடங்கு நடத்தி காளையை நல்லடக்கம் செய்தனா்.