திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் ஆண், பெண் தற்கொலை

DIN

திருச்சி அருகே வெவ்வேறு சம்பவங்களில் ஆண், பெண் தற்கொலை செய்து கொண்டனா்.

திருச்சி மாவட்டம் போதாவூா் மேலத்தெருவைச் சோ்ந்தவா் ரத்தினகிரி மகள் சிறும்பாயி (19). புதன்கிழமை காலை வீட்டில் தனியாக இவா் இவா் பூச்சிக் கொல்லி மருந்தை உட்கொண்டு மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

மற்றொரு சம்பவம்: திருச்சி மாவட்டம் அதவத்தூா் சுண்ணாம்புக்காரன்பட்டியைச் சோ்ந்தவா் மருதமுத்து (42), கட்டடத் தொழிலாளி.

கடந்த சில நாள்களாக மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்த இவருக்கு அவரது மனைவி பணம் தர மறுத்தாராம். இதில் மனமுடைந்த மருதமுத்து பூச்சிக் கொல்லி மருந்தை உட்கொண்டு, அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இவ்விரு சம்பவங்கள் குறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

SCROLL FOR NEXT