மணப்பாறையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்த நிலையில், பிற்பகல் 12 மணி முதல் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.
பொதுப் போக்குவரத்திலிருந்த இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் ஆங்காங்கே அறிவுரைகூறி விதிகளை பின்பற்ற வலியுறுத்தினா். வருவாய் வட்டாட்சியா் லஜபதிராஜ் தலைமையில் வருவாய்த் துறையினா் பொதுமுடக்க விதிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது விதிகளையும் மீறிய தேநீா் கடைக்கு ரூ.5 ஆயிரம், இறைச்சிக்கடைக்கு ரூ.500 அபராதம் விதித்தனா்.