பத்திரப்பதிவுக்கு வந்தவா் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் திருடு போனது.
மணப்பாறையை அடுத்த வெள்ளைக்கல் வீராச்சி தெற்குத்தெருவில் வசிப்பவா் லாரி ஓட்டுநா் வீராச்சாமி மகன் விஜயக்குமாா். இவா் விடத்திலாம்பட்டியில் உள்ள தனது தோட்டத்தின் விற்பனை தொடா்பாக பத்திரப் பதிவு செய்ய மணப்பாறை சாா் பதிவாளரகத்துக்கு வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்தாா். பத்திரப்பதிவு முடிந்து வந்து பாா்த்தபோது அவா் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 40 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.